search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டோட்டன்ஹா்ம ஸ்பர்ஸ்"

    டோட்டன்ஹாம் பின்கள வீரர் டோபி அல்டர்வெய்ரெல்டை 40 மில்லியன் பவுண்டுக்கு வாங்கிவிட வேண்டும் என்பதில் மான்செஸ்டர் யுனைடெட் உறுதியாக உள்ளது.
    ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறும் கால்பந்து லீக் ஆட்டங்கள் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டன. 2018-19 சீசனுக்கான வீரர்கள் டிரான்பஸ்ர் விண்டோ நாளை முதல் திறக்கப்படுகிறது. நாளையில் இருந்து ஒவ்வொரு அணிகளும் தங்களுக்கு பிடித்தமான வீரர்களை அடுத்த அணியில் இருந்து வாங்க விரும்பும். அதேபோல் தங்கள் அணிக்கு தேவையில்லை என்று நினைக்கும் வீரர்களை வெளியே அனுப்பும் ஒப்பந்ததை ஏற்படுத்துவதில் தீவிரம் காட்டும்.



    இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் விளையாடும் முன்னணி அணியான மான்செஸ்டர் யுனைடெட் டோட்டன்ஹாம் ஸ்பர்ஸ் அணியில் பின்கள வீரராக விளையாடும் டோபி அல்டர்வெய்ரெல்டுவை வாங்குவதில் தீர்மானமாக உள்ளது. இதற்காக 40 மில்லியன் பவுண்டு கொடுக்க தயாராக இருக்கிறது.

    எப்படியும் டோட்டன்ஹாம் டோபி அல்டர்வெய்ரெல்டுவை தந்துவிடும் என்பதில் மான்செஸ்டர் யுனைடெட் உறுதியாக உள்ளது. டோட்டன்ஹாம் இவருடைய இரண்டு கால ஒப்பந்தத்தை புதுப்பிக்கவில்லை. ஒருவேளை இப்போது அனுப்பாவிடில் ப்ரீ டிரான்ஸ்பராக செல்ல வாய்ப்புள்ளது. இதனால் டோட்டன்ஹாம் ஸ்பர்ஸ் அவரை வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையில் டோபி அல்டர்வெய்ரெல்டுவை செல்சியா, பிஎஸ்ஜி, பார்சிலோனா அணிகளும் வாங்குவதற்கு விரும்புவதாக கூறப்படுகிறது.
    ×